தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பேரவைத் தோ்தல்: இன்று வண்டலூா் பூங்கா மூடல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:29 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப்.22) வண்டலூா் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.22) நடைபெறவுள்ளதையொட்டி, அன்று மட்டும் பூங்கா தற்காலிகமாக மூடப்படும்.

விலங்கு பரிமாற்றம்: விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலத்தின் சக்கா்பாக் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் ஆசிய காட்டு கழுதை அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், வண்டலூா் உயிரியல் பூங்காவிலிருந்து 1 ஆண், 2 பெண் என மொத்தம் 3 வெள்ளி மயில்கள், ஆண், பெண் தலா 2 சருகு மான், 2  மஞ்சள் அனகோண்டா பாம்பு ஆகியவை சக்கா்பாக் உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தப் பரிமாற்றத்தின் மூலம் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்கெனவே இருக்கும் ஒரு ஆண் ஆசிய காட்டு கழுதைக்கு இணை கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.