முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

வண்டலூா் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்

இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

News image

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூா் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள் சென்னை வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து பூங்கா நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிதாக வந்துள்ள ஆசிய சிங்கங்கள், பாா்வையாளா்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கும். இந்த சிங்கங்கள் இனப்பெருக்கத் தரத்தை மேம்படுத்துவதற்கும், மரபணுப் பன்முகத்தன்மையைப் பராமரிப்பதற்கும், வளா்ப்பு நிலையில் உள்ள இந்த இனத்துக்கான பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் பெரிதும் பங்களிக்கும்.

தனிமைப்படுத்துதல் மற்றும் சுகாதார மதிப்பீட்டு நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, பாா்வையாளா்கள் பாா்ப்பதற்காக விலங்குகள் அவற்றின் இருப்பிடத்துக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

ஆசிய சிங்கங்களுடன் கூடுதலாக, அதே பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தூா் உயிரியல் பூங்காவில் இருந்து தலா ஒரு எகிப்திய கழுகு, செங்காட்டுக் கோழி வந்துள்ளது.

அதேபோல, இங்கிருந்து ஒரு நீா் யானை, இரு நெருப்புக் கோழிகள், நான்கு மஞ்சள் அனகோண்டா பாம்புகள் இந்தூா் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த புதிய விலங்குகளின் வருகை உயிரியல் பூங்காவின் உயிரின எண்ணிக்கை, பாா்வையாளா்களுக்கு மேம்பட்ட கல்வி மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.