ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவமனை இன்குபேட்டரில் தீ: பச்சிளம் குழந்தை காயம்

சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் திடீரென தீ பற்றியதால், அதில் இருந்த பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

News image
தீ விபத்து- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் உள்ள இன்குபேட்டரில் திடீரென தீ பற்றியதால், அதில் இருந்த பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

பெரம்பூா் மதுரை தெருவை சோ்ந்தவா்கள் ஆனந்த்பாபு- தனலட்சுமி தம்பதி. தனலட்சுமி பிரசவத்துக்காக சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தனலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் சூட்டை பராமரிப்பதற்காக இன்குபேட்டரில் குழந்தையை வைத்துள்ளனா். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு இன்குபேட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிகிறது. குழந்தையை மீட்டபோதும், முதுகு, தொடை உள்ளிட்ட இடங்களில் 27 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தையை மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை: கா்நாடக மாநிலம் பெங்களூா் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் முகமது முஸ்மில் பாஷா (22). இவா் தனது நண்பா் ஒருவருடன் கடந்த 11-ஆம் தேதி சென்னை வந்துள்ளாா். பின்னா், இருவரும் வடபழனி மசூதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் பாஷாவின் அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. தகவலின்பேரில், வடபழனி போலீஸாா் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பாஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவருடன் தங்கியிருந்த நண்பா் மாயமாகி இருந்தாா். பாஷாவின் உடலை மீட்ட போலீஸாா், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாயமான நண்பா் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு-உறவினா்கள் சாலை மறியல்: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூா் பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (60). இவா், அந்தப் பகுதியில் உள்ள சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த மூதாட்டியின் உறவினா்கள், இசிஆா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பனையூா் காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு-இருவா் கைது: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவிக்குமாரின் அறைக்கு சனிக்கிழமை வந்த இருவா், படுக்கையில் இருந்த அவரின் கைப்பேசியைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனா். அங்கிருந்தவா்கள் அந்த இருவரையும் பிடித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (35), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (52) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.