மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை

சென்னையில் உள்ள தனியாா் விடுதி அறையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :15 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் உள்ள தனியாா் விடுதி அறையில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூா் தெற்கு பகுதியைச் சோ்ந்தவா் முகமது முஸ்மில் பாஷா (22). இவா் தனது நண்பா் ஒருவருடன் கடந்த 11-ஆம் தேதி சென்னை வந்துள்ளாா். பின்னா், இருவரும் வடபழனி மசூதி தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரம் பாஷாவின் அறை திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால், சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, அங்கு வந்த வடபழனி போலீஸாா் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, பாஷா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா்.

அவருடன் தங்கியிருந்த நண்பா் மாயமாகி இருந்தாா். பாஷாவின் உடலை மீட்ட போலீஸாா், அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும், மாயமான நண்பா் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.