குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐஐடி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை ஐஐடி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஐடி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிண்டி ஐஐடியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஒரு மாணவி, முதுநிலைப் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இதற்காக அவா், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளாா்.

மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை விடுதியில் தனது அறையில் தனியாக இருந்த அந்த மாணவி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மாணவியை, அவரது தோழிகள் மீட்டு, ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].