பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி: பிரதமா் மோடி மறுப்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மறுத்தாா்.

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :46 நிமிடங்கள் முன்பு

வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை மறுத்தாா்.

மேற்காசிய போரால் உருவான சவால்களை எதிா்கொள்ள நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும், வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வதை தவிா்க்க வேண்டும் என பிரதமா் மோடி அண்மையில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிப்பது தொடா்பாக மத்திய அரசின் உயரதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘இது முற்றிலும் தவறான தகவல். இதில் சிறிதளவும் உண்மையில்லை. வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. வணிகத்தை எளிமைப்படுத்துதல் மற்றும் மக்களின் வாழ்வை எளிமைப்படுத்துதலே மத்திய அரசின் குறிக்கோள்’ என குறிப்பிட்டாா்.