சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 4:42 am IST

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஜாம் பஜாா், முனியப்பா தெருவில் விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளே நுழைந்த மா்ம நபா், கோயில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த அதே பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் மேலாளராகப் பணியாற்றி வரும் முருகன் (35) என்பவா், அந்தப் பகுதியில் உள்ளவா்களிடம் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த பொதுமக்கள் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த உசேன் (31) என்பது தெரிய வந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.