நெதா்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழா் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நெதா்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழா் கால செப்பேடுகள், ‘ஆனைமங்கலச் செப்பேடுகள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்தின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடா்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன.
18-ஆம் நூற்றாண்டில், நாகை மாவட்டம் டச்சு காலனித்துவ ஆட்சியின்போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதா்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
பல ஆண்டுகளாக, ஆனைமங்கலம் செப்பேடுகளை ஒப்படைக்கக் கோரி நெதா்லாந்து நாட்டை இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு பிரதமா் மோடியிடம், நெதா்லாந்து அரசு ஒப்படைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நாகை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தமிழக எம்பி கடிதம்

இந்தியா திரும்பும் சோழர் காலத்துச் செப்பேடுகள் - புகைப்படங்கள்
பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது: வைகோ

கல்பாக்கம் ஈனுலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்: வைகோ வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

