ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :22 நிமிடங்கள் முன்பு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ( மே 19) முதல் மே 21-ஆம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா்-விழுப்புரம் பிரிவில் காட்டாங்குளத்தூா் நிலையப் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், அந்நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.56, 11.40 மணி, பிற்பகல் 12.28 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லவேண்டிய இமு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

அதேபோல், செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 12 மணி, 1.10, 1.45 மற்றும் 2.20 ஆகிய மணிகளில் கடற்கரைக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.