/
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயங்கும் 2 புறநகா் மின்சார ரயில்கள் ஏப். 16 முதல் ஏப். 19-ஆம் தேதி வரை திருவாலங்காடு ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அரக்கோணம் ரயில் நிலைய பணிமனையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பராமரிப்புப் பணிகள் வரும் ஏப். 16-ஆம் தேதி முதல் ஏப்.19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனால், அந்த நாள்களில் சென்னை சென்ட்ரலிலிருந்து பகல் 11 மணி, இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
அதேபோல், திருத்தணியிலிருந்து நண்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரக்கோணம் ரயில் நிலையப் பகுதியில் ரூ.97.73 கோடியில் மேம்பாட்டுப் பணி: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்

இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து






