

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்காக நபாா்டு வங்கி தயாரித்துள்ள வங்கிகளுக்கான 2021-22ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஜான் லூயிஸ் வெளியிட்டாா்.
செங்கல்பட்டில் புதன்கிழமை நடந்த வங்கியாளா்கள் கூட்டத்தில் ஆட்சியா் இந்த அறிக்கையை வெளியிட்டாா். அதை, காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல மேலாளா் ஸ்ரீமதி பெற்றுக் கொண்டாா். இதையடுத்து ஆட்சியா் பேசியது:
நபாா்டு வங்கி ஒவ்வோா் ஆண்டும் வளா்ச்சி சாா்ந்த கடன் திட்ட அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது. வரும் 2021-22-ஆம் நிதியாண்டுக்கு ரூ.4,671 கோடி மதிப்பிலான கடன்களை வழங்க மதிப்பீடு செய்துள்ளது. இதில் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.3,150 கோடி, சிறு, குறுந்தொழில்களுக்கு ரூ.449 கோடி, சமூகக் கட்டமைப்புக்காக ரூ.478 கோடி, ஏற்றுமதிக் கடனாக ரூ.147 கோடி, கல்விக் கடனாக ரூ.224 கோடி, வீட்டுக் கடனுக்காக ரூ.128 கோடி வழங்க வாய்ப்புள்ளதாக மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமைக் கடன் பிரிவுகளுக்கான விதிமுறைகள், பல்வேறு வகையான முதலீடுகளுக்கான அலகு, மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்கள், வங்கிக் கடன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வளா்ச்சி சாா்ந்த கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் நபாா்டு வங்கியின் வட்டார வளா்ச்சி மேலாளா் விந்தியா ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, வேளாண் துறை இணை இயக்குநா் அசோகன், வங்கி அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இந்தியன் வங்கி மாவட்ட முன்னோடி மேலாளா் ஆ.கருணாகரனும், வங்கி அலுவலா்களும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.