சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

செங்கல்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

செங்கல்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :25 ஜனவரி 2021, 9:33 am

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. தொண்டை நந்நாடு சான்றோர் உடைத்து என போற்றப்படுவதும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் பூத்துக்குலுங்கிய பகுதி என்பதால் செங்கழுநீர்பட்டு என்று அழைக்கப்பட்டு மருவி செங்கல்பட்டு என்று அழைக்கப்படடும் செங்கல்பட்டு நகரத்தின் மையத்தில் ஜீவானந்தம் தெருவும் தெருவில் ஜீவனுக்குள் சத்தியாய் அங்கம் அதை ஆளும் காளியாய் தாயாய் வருவோருக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கும் அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. 

Story image

இக்கோயில் கோயில் நிர்வாகிகள் விழாக்குழுவினர் கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுத்தனர்.இதையடுத்து கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலில் புதிதாக ஸ்ரீ பெரியாண்டவர், ஸ்ரீ முருகர் வள்ளி தெய்வயானை, ஸ்ரீ வீரபத்திரன், ஸ்ரீ மச்சக்கன்னி, ஸ்ரீ நாகேஸ்வரி ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திங்கள்கிழமை மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை கரிக்கோலம் வீதிகளின் எல்லைகளுக்கு வீதி உலா நடைபெற்றது. 

பிரவேசபலி வாஸ்துசாந்தி யாகசாலை அலங்காரம் முதல் கால பூஜை யாகசாலை பூஜையும் பிம்பசுத்தி, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ,நாடி சந்தானம் பாலா தரிசனம் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. இதனை அடுத்து திங்கள்கிழமை காலை பூஜை விசேஷ திரவிய ஹோமம் விசேஷ சாந்தி கும்ப அலங்காரம், விசேஷ திரவிய ஹோமம் இரண்டாம் கால பூஜை, கும்ப கலசங்கள் புறப்பாடு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரசாதம் விநியோகம் நடைபெற்றது.

Story image

இதனையடுத்து அம்மனுக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளிதாசன் பருவதராஜகுல மரபினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.