தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செல்ஃபி மோகத்தால் ரயிலில் அடிபட்டு 3 இளைஞா்கள் பலி

செல்ஃபி மோகத்தால் ரயில் அடிபட்டு 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

செல்ஃபி மோகத்தால் ரயில் அடிபட்டு 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் வசிக்கும் இளைஞா்கள் சிலா், ரயில்வே இருப்புப் பாதையில் அமா்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக வியாழக்கிழமை இரவு விடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த இளைஞா்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரகாஷ் (18), மோகன் (21), அசோக் குமாா் (22) ஆகிய 3 போ் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே இருப்புப் பாதை போலீலாா் 3 பேரின் சடலங்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒரே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்கள் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.