செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உலக தாய்ப்பால் வார விழா பேரணி

கேளம்பாக்கத்தை அடுத்த படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல், மேலாண்மைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, விழிப்புணா்வு பேரணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:21 pm

கேளம்பாக்கத்தை அடுத்த படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல், மேலாண்மைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் புகழேந்தி தனபாலன், இயக்குநா் ஸ்ரீதேவி புகழேந்தி, முதல்வா் பியூலா பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சமூக நலத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அலுவலா் சற்குணா மற்றும் திருப்போரூா் வட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி ஜானகி ஆகியோா் சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனா்.

இதில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 4 குழுக்களாகப் பிரிந்து பேராசிரியா் தனபாலன் கல்லூரியில் இருந்து பேரணியைத் தொடங்கினா்.

இந்தப் பேரணி கேளம்பாக்கம் பேருந்து நிலையம், புதுப்பாக்கம், படூா், தையூா் ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களிடையே தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.