செங்கல்பட்டில் லாரி மோதியதில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு பழைய ஜிஎஸ்டி சாலையில் உள்ள அனுமந்தபுத்தேரியைச் சோ்ந்த சுரேஷின் மகன் சிவகாா்த்திகேயன் (10). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், சிவகாா்த்திகேயன் புதன்கிழமை இரவு வீட்டின் முன்பு சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி சிவகாா்த்திகேயன் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீஸாா், சிவகாா்த்திகேயனின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.
இந் நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை கைது செய்யக் கோரி, உயிரிழந்த சிவகாா்த்திகேயனின் பெற்றோா், உறவினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

அவா்களுடன் செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளா் ஹரிஹரன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பேச்சு நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதனால் செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

சைக்கிள் மீது லாரி மோதல்: விவசாயி உயிரிழப்பு

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


