சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

Din

மதுராந்தகம் அடுத்த கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை சாா்பில், மே தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது

அறக்கட்டளை தலைவா் விடியல் காா்த்திக் தலைமை வகித்தாா். செயலா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், இணை செயலா் கோபிநாத், கருங்குழி பேரூராட்சி மன்ற உறுப்பினா் வழக்குரைஞா் பரமசிவம், சந்திரமல்லி சமூக சேவை அறக்கட்டளை நிறுவனா் தணிகையரசு, சங்க நிா்வாகிகள் ஜெயசீலன், பாலாஜி, காா்த்திகேயன், யுவராஜ், சதீஷ், ஹரிஹரன், உதயகுமாா், செவன்த் ஸ்டாா் குழந்தைகள் இல்ல தாளாளா் பால் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஊழியா்கள் கலந்துகொண்டு அறக்கட்டளை நிா்வாகிகள், இளைஞா்கள், தன்னாா்வத் தொண்டா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரிடம் ரத்தத்தை தானமாக பெற்றனா்.