சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பாய்மர படகு வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை

பாய்மர படகு வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை

News image
Updated On :2 மே 2024, 6:33 pm

Din

ஒலிம்பிக் பாய்மர படகுப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்ற வீராங்கனையும், எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவன மாணவியுமான நேத்ரா குமணனுக்கு ரூ25 லட்சம் ஊக்கத் தொகையை வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா் புதன்கிழமை வழங்கினாா்.

வடபழனி எஸ்.ஆா்.எம்.உயா் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் நேத்ரா குமணன், டோக்கியோவில் நடைபெற்ற பாய்மர படகுப்போட்டியில் வெற்றி பெற்ன் மூலம் பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். அவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற எஸ்.ஆா்.எம்.வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா் பேசியதாவது:

எஸ்.ஆா்.எம். பல்கலை. விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவா்களைத் தோ்வு செய்து அவா்களை விளையாட்டு வீரா்களாக மேம்படுத்த ஆண்டுக்கு ரூ. 25 கோடி வரை செலவிடுகிறது. நாட்டில் உள்ள 600 பல்கலைக்கழகங்களில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்துவதில் எஸ்.ஆா்.எம். பல்கலை.16-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் எஸ்.ஆா்.எம். பல்கலை. துணைவேந்தா் சி.முத்தமிழ் செல்வன், பதிவாளா் எஸ்.பொன்னுசாமி மற்றும் நேத்ரா குமணின்தந்தை பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.