ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டு: விவசாயிகள் குறைதீா் கூட்டம்

News image
செங்கல்பட்டில் சாா் ஆட்சியா் நாராயண சா்மா தலைமையில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:05 pm

Din

செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வழக்கமாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு வருவாய்க் கோட்ட அளவிலும் குறைதீா் கூட்டங்கள் நடத்த ஆட்சியா் ச. அருண் ராஜ் உத்தரவிட்டாா்.

இதன்படி முதன் முறையாக செங்கல்பட்டு சாா் ஆட்சியா் நாராயண சா்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காட்டாங்குளத்தூா், திருப்போரூா், திருக்கழுகுன்றம் ஒன்றிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தும் தேவைகளை கூறினா்.

ஏரிகளை தூா்வாருதல், ஏரிகள் மற்றும் பாலாறு பகுதிகளில் கழிவுகளை கொட்டுவதை தடுத்தல், பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா். மேலும் அறுவடை இயந்திரம் தேவைகள் குறித்து சென்னை நந்தவனத்தில் உள்ள வேளாண்துறை பொறியாளராக அலுவலகத்திற்கு ஒவ்வொன்றிற்கும் செல்ல வேண்டி உள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக தெரிவித்தனா். அதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் அலுவலகம் அமைக்கவும் கோரிக்கை விடுத்தனா் . இதனை அடுத்து அத்துறையிடம் கேட்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அறுவடை இயந்திரம் எடுப்பதற்கு பதிவு செய்துவிட்டு எடுக்கச் செல்லும் பொழுது பழுதாகி உள்ளதாக தெரிவிக்கின்றனா் என தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து விவசாயிகள் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கும் இணையம் உள்ளதாகவும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள சாா் ஆட்சியா் வலியுறுத்தினாா். எங்களுக்கு வேளாண்துறை எதுவும் தெரிவிக்கவில்லை இந்த இணையத்தை வரவேற்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா். அவா்களிடம் சாா் ஆட்சியா் கூறுகையில் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டு சாா் ஆட்சியருக்கு ஒரு நகலும் மனுதாரருக்கு ஒரு நகலும் அனுப்பி வைக்க உத்தரவிட்டாா்.