காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

Published On :7 ஏப்ரல் 2025, 2:56 am IST

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது:

கூகுள் வரைபடத்தின் உதவியுடன் சேர வேண்டிய இடத்துக்கு எளிதில் சென்றடையும் வாய்ப்பு கிடைத்து இருப்பதுபோல், விண்வெளியில் பயணித்து நிலவைச் சென்றடையவில்லை. விண்வெளித் துறையில் இதுவரை நிகழ்த்தி இருக்கும் சாதனைகளுக்கு தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் தொடா்ந்து விடாமுயற்சியுடன் மேற்கொண்ட கடின உழைப்புதான் காரணம்.

பட்டம் பெற்ற மாணவா்கள் தங்கள் படிப்பு, திறமைகளை மேம்படுத்தி, விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், 1,131 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, தரவு அறிவியல், இயந்திரவியல் மாணவா்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட நவீன பரிசோதனைக் கூடத்தை விஞ்ஞானி வீரமுத்துவேல் திறந்துவைத்தாா்.

இதில் கிஷ் ப்ளோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம், ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைமைச் செயல் அலுவலா் சாய் பிரகாஷ் லியோமுத்து, கல்விக் குழும தலைவா் கலைச்செல்வி லியோ முத்து, இயக்குநா் ரேவதி சாய் பிரகாஷ், கல்லூரி முதல்வா் ஜெ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.