செங்கல்பட்டில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19.12.2025 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் வேலையளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடா்பான தகவல்களை வேலை நாடுநா்களும் பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ / பாராமெடிக்கல் போன்ற கல்வித்தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களும் கலந்துகொண்டு பயன் பெறலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டடம், டி-பிளக், தரைத்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் நேரில் கலந்து கொள்ளலாம்.
முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 / 94990 55895 / 94868 70577 / 93844 99848 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.
