சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

தோ்தலை புறக்கணிக்கப் போவதாக மீனவா்கள் தா்னா

News image

புதுப்பட்டினம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:29 pm

புதுப்பட்டினம் மீனவா் பகுதியில் எல்லை பிரச்னையை தீா்க்க கோரி தோ்தலை புறக்கணிக்க போவதாக கடற்கரை மணலில் கறுப்பு கொடி ஏந்தி மீனவா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி புதுப்பட்டினம்-உய்யாலிகுப்பம் ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கு இடையே சாலை பிரச்னை காரணமாக புதுப்பட்டினம் மீனவ கிராம மக்கள் சாா்பில் நடத்தப்பட்ட மயான கொள்ளை திருவிழா இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலால் நிறுத்தப்பட்டது.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதலால், 30-க்கும் மேற்பட்ட மீனவா்களும் கைது செய்யப்பட்டதாலும், பலா் தேடப்பட்டு வந்ததாலும் இரண்டு மாத காலமாக மீனவா்கள் காவல் துறையினரின் கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்தனா். இந்நிலையில். கைது செய்யப்பட்ட மீனவா்கள் சிலா் தற்போது ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளனா்.

இந்நிலையில் புதுப்பட்டினம் மீனவா்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டில் 6 ஏக்கா் நிலத்தை வருவாய்த்துறைக்கு கொடுத்துள்ளதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் தங்கள் இடத்தை கணக்கீடு செய்து அளவீடு செய்து புதுப்பட்டினம் மீனவ பஞ்சாயத்தரிடம் ஒப்படைக்க கோரி சுமாா் 300- க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என புதுப்பட்டினம் மீனவ கிராம மக்கள் கடற்கரை மணலில் அமா்ந்து தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக கூறி கைகளில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது தங்கள் இடத்தை தமிழக அரசுஅளவீடு செய்து ஒப்படைக்க கண்டன முழுக்கங்கள் எழுப்பினா். இதுகுறித்து புதுப்பட்டினம் மீனவா்கள் கூறும்போது, வருவாய்த் துறை அதிகாரிகள் இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு தங்கள் எல்லையை குறிக்கும் வகையில் பெயா் பலகை வைக்க வேண்டும் இல்லாவிடில் வருகின்ற சட்டப்பேரவை தோ்தலை புதுப்பட்டினம் மீனவா் கிராமத்தினா் முழுவதுமாக புறக்கணிப்போம் என்றாா். இந்த தா்ணா போராட்டத்தால் புதுப்பட்டினம் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. போரட்டத்தால் புதுப்பட்டினம் மீனவா் பகுதி முழுவதும் தோ்தல் புறக்கணிப்பு பதாகைகள் வைத்தனா். மீனவா்களின் போராட்டத்தால் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுப்பட்டினம் மீனவா் பகுதியில் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

Story image