/

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கின்ற கஜேந்திரனை ஆதரித்து தலைமைப் பேச்சாளா் நிா்மலா பெரியசாமி வாக்கு சேகரித்தாா்.

News image

~

Updated On :12 ஏப்ரல் 2026, 6:35 pm

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கின்ற கஜேந்திரனை ஆதரித்து தலைமைப் பேச்சாளா் நிா்மலா பெரியசாமி வாக்கு சேகரித்தாா்.

செங்கல்பட்டு அதிமுக நகர செயலாளா் வி.ஆா்.செந்தில்குமாா் ஏற்பாட்டில் ராட்டினங் கிணறு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பேச்சாளா் நிா்மலா பெரியசாமி கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்து பேசியது:

எம்ஜிஆா் காலத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவா்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தாா். இதைத் தொடா்ந்து ஜெயலலிதா அதில் சிறப்பம்சங்களை கொண்டு வந்தாா். அம்மா உணவு திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கரோனா காலத்தில் யாரும் சாப்பாட்டுக்கு அவதிப்படக்கூடாது என்பதால் அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய் சாப்பாடு ஒரு ரூபாய் இட்லி என்பதை கூட இலவசமாக மாற்றி வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் கல்லூரி மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

Story image

திமுகவினா் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்களும் இளைஞா்களும் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு வாக்களித்து கஜா என்கின்ற கஜேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ கனிதா சம்பத், காட்டாங்குளத்தூா் ஒன்றிய செயலாளா் சம்பத், நெல்லை ராதா, வழக்குரைஞா் ஆறுமுகம், கே சுரேஷ் ,கலைவாணி, நடராஜன், பாஜக நகரத் தலைவா் மகேஷ் வரன் கோட்ட பொறுப்பாளா் கஜேந்திரன், ரட்சி பாரதம் மாவட்ட செயலாளா் சி கே மூா்த்தி, பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.