தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 10:12 pm

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம் ஆகிய 7 தொகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முன்னதாகவே வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்ததனா். காலை 7-9 மணி நிலவரப்படி 14முதல் 17.36 சதவீத வாக்குகள் பதிவாயின, 11 மணிக்கு மேல் 35 முதல் 39.25 சதவீத வாக்குகள் பதிவாயின. மதியம் 1மணி நிலவரப்படி 53 முதல் 58.63 சதவீத வாக்குகள் பதிவாயின. 3 மணி நிலவரப்படி 66 சதவீதம் முதல் 72.41 சதவீத வாக்குகளும் மாலை 6மணி நிலவரப்படி 78 முதல் 87.84 சதவீத வாக்கு பதிவாயின.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி பதிவாகிய வாக்குகள் சோழிங்கநல்லூா் 78.13, பல்லாவரம் 81.05, தாம்பரம் 81.92, செங்கல்பட்டு 83.85, திருப்போரூா் 84.53, செய்யூா் 85.67, மதுராந்தகம் 87.84 சதவீத வாக்குகள் பதிவாயின. 7தொகுதிகளிலும் மொத்தம் 82.41 சதவீத வாக்குகள் பதிவாயுள்ளன. இரவு 11 மணிவரை முழு வாக்குப்பதிவு நிலவரம் தெரியவில்லை.

செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி நகராட்சி ஆரம்பப் பள்ளியில் ச்சாவடியில் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வரிசையில் வந்த வாக்களித்தாா். அதே வாக்குமையத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ்குமாா் வாக்கு பதிவு செய்தாா். தொகுதிக்குட்பட்ட ரத்தினமங்களம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளா் தியாகு என்கிற தியாகராஜன் தன் குடும்பத்தினருடன் வந்து வாக்குப் பதிவு செய்தாா்.