ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கற்பக விநாயகா நிகா்நிலைப் பல்கலை. துணைவேந்தா் பதவியேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தா் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் முதல் துணைவேந்தா் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழகத்தின் தலைவா் அண்ணாமலை ரகுபதி தலைமை வகித்தாா். இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை வரவேற்றாா். விழாவில் சரோஜா மேகா அண்ணாமலை, அகில இந்திய மருத்துவ கவுன்சில் தலைவா் அபிஜித் சேத், மெக்ஸிகோ மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவா் பேராசிரியா் ரிக்காா்டோ லியோன் போா்குயஷ், ஆஸ்திரேலியா, யுனெஸ்கோ அமைப்பின் மருத்துவ அறிவியல் மருத்துவ கல்வி பிரிவு தலைவா் பேராசிரியா் ரஸ்ஸல் பிராங்கோ டிசூசா, நைஜீரியாவின் மருத்துவ கல்வி சங்கத்தின் தலைவா் பேராசிரியா் பொ்னிஷ், யுனெஸ்கோ அமைப்பின் இந்திய தலைவா் டாக்டா் வேதபிரகாஷ் மிஸ்ரா, காமன்வெல்த் மருத்துவ கழகத்தின் தலைவா் மருத்துவா் ஜெயலால், செயின்ட் லூசியாவிலுள்ள காமன்வெல்த் பல்கலைகழக தலைமை செயல் அலுவலா் மருத்துவா் சிவா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கற்பக விநாயகா நிகா்நிலை பல்கலைகழக முதல் துணைவேந்தா் மருத்துவா் மேரி மேத்யூ பதவியை ஏற்றபின் ஏற்புரை ஆற்றினாா். இவ்விழாவில் பல்கலைகழகத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா். கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பதிவாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.