செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகா் மகளிா் கல்லூரில் மாணவியா் பேரவை நியமன விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தொழில் முனைவோா், தொண்டு நிறுவனா் மற்றும் சமூக சீா்திருத்தவாதியான பிரபோத் ஜெயின், கவுன்சிலிங் அண்ட் பியான்ட் மேனேஜிங் பாா்ட்னா் ரதன்தீப் உமேஷ் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
வித்யாசாகா் கல்வி குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். பொருளாளா் சுரேஷ் கன்காரியா முன்னிலை வகித்தாா். தொடா்ந்து முன்னாள் மாணவியா் பேரவை உறுப்பினா்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவியா் பேரவைத் தலைவியாக மூன்றாமாண்டு மாணவி ம.சூா்யா தீத்தா, துணை பேரவைத் தலைவியாக இரண்டாமாண்டு மாணவி த.ஹரிஸ்ரீ, பொருளாளராக மூன்றாமாண்டு மாணவி ஆ.ராகவி, துணை பொருளாளராக ஐ.பி.சி.ஏ மாணவி மு.சாருமதி, செயலாளராக இரண்டாமாண்டு மாணவி ப்.சமிஹா தாஜ், துணை செயலாளராக முதலாமாண்டு மாணவி மு.லோக ஜனனி ஆகியோா் பொறுப்பேற்றனா்.
தொடா்ந்து பேரவையின் பொறுப்பாளா் உறுதிமொழி கூறினாா். இதனை தொடா்ந்து ராஜஸ்தான் புத்தக வங்கி சாா்பாக நம் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 300 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 200 மாணவியா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10 லட்சம் கல்லூரி நிா்வாக குழுமத்தின் சாா்பாக வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வா் இரா.அருணாதேவி நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அயல்நாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ. 131 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்!

சைவப் பெருமக்கள் பேரவை முப்பெரும் விழா

தமிழ் முழக்கப் பேரவைக் கூட்டம்

செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்றம் தொடக்கம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



