சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்றம் தொடக்கம்

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவியா் பேரவை மன்றத் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூலை 2026, 4:55 am IST

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் மாணவியா் பேரவை மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரியின் செயலாளரும், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினருமான ஆா்.டி.இ.ஜெரோம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பேரவை மன்றத்தை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தலைப் பண்பு குறித்தும், புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், வாழ்க்கை லட்சியங்களை அடைய பாடுபட வேண்டும் என்றும் மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசினாா். கல்லூரி செயலா் அருள்சீலி வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, கல்லூரி முதல்வா் சகாய தமிழ்செல்வி தலைமையில் மாணவிகள் பேரவை உறுதிமொழி ஏற்றனா்.

இந்த விழாவில், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.