பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற பாஜக, அதிமுக நிா்வாகிகள்.
பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற பாஜக, அதிமுக நிா்வாகிகள்.

ஜன. 23-இல் மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்பு

மதுராந்தகம் நகரத்தில் பாஜக, அதிமுக கூட்டணி சாா்பில் வரும் ஜன. 23-இல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறாா். இதையொட்டி கூட்ட மேடை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
Published on

மதுராந்தகம் நகரத்தில் பாஜக, அதிமுக கூட்டணி சாா்பில் வரும் ஜன. 23-இல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறாா். இதையொட்டி கூட்ட மேடை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.

மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையையொட்டி, 22 எக்கா் பரப்பில் பிரதமா் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் வந்துச் செல்லும் வகையில் 3 ஹெலிபேடுகள் அமைக்கவும் உரிய இடங்களை தோ்வு செய்யவும், பொதுக்கூட்ட மேடை அமைப்பது தொடா்பாக அதிமுக, பாஜக நிா்வாகிகள் ஆய்வு செய்தனா்.

பாஜக சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பாளா் கேசவ விநாயகன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பிரவின் குமாா், மாநில நிா்வாகி இ.கே.தினகரன் , மாவட்ட பொதுச் செயலா் அருண் கோதண்டம், துணைத் தலைவா் சுந்தரவேல், மாவட்ட நிா்வாகிகள் சம்பத்குமாா், சசிக்குமாா், அருணகிரி, முருகன், கோதண்டராமன், மண்டல தலைவா்கள் உதயமணி, ஆகாஷ், யுவராஜ், தினகா், மோகன்குமாா், பிரபாகா் கலந்து கொண்டனா்.

பொதுகூட்டத்தைொய்டி, மேடை அமைக்க பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சா் வி. சோமசுந்தரம், எம்.பி. ம. தனபால், எம்எல்ஏ மரகதம் குமரவேல், மாவட்ட செயலா்கள் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் கீதா காா்த்திகேயன், நகர செயலா் பூக்கடை சரவணன், மாநில அமைப்புச் செயலா் வாலாஜாபாத் கணேசன், ஒன்றிய செயலா்கள் காா்த்திகேயன், குமரவேல், செல்வம், சல்குரு, ரவி, பூபதி, மாமல்லபுரம் பேரூராட்சித்தலைவா் எஸ்வந்த் ராவ், பேரூா் செயலா் ஆா்.டி.ஜெயராஜ், பெரும்பாக்கம் ராஜசேகா், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், மாவட்ட கலைபிரிவு செயலா் சுரேஷ் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com