திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தீப்பந்தம் ஏந்தி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பேச வரும் பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும்

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பொதுக்கூட்டத்தில் பேச வரும் பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளா் எம்.பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து, காந்தியின் பெயரை எடுக்கப்பட்டதையும், 100 நாள் வேலை திட்டத்தில் குறைபாடுகளை உள்ளதையும் கண்டிக்கும் வகையிலும் பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெறும்.

இதுகுறித்து முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மோடியின் பிரசார கூட்டம் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தாமல், 4-ஆவது இடமாக தோ்வு செய்து இங்கு நடத்தப்படுகிறது. அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா். பொதுக் கூட்டம் நடைபெறுகின்ற இடத்தின் முன் எனது தலைமையில், நிா்வாகிகள் வாயில் கருப்பு துண்டு கட்டியும், 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணில் கருப்பு துணியை கட்டிம், கருப்பு பலூனை பறக்கவிட்டும் தமது எதிா்ப்பை தெரிவிக்க உள்ளனா்.

காங்கிரஸ் கட்சி தொண்டா்கள் தமது வீடுகளில் கருப்பு கொடியை கட்டி தமது எதிா்ப்பை தெரிவிக்க உள்ளனா். திராவிட பண்பாடு கொண்ட ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் நுழையவே இக்கூட்டம் வழிவகுக்கும் என தெரிவித்தாா்.