இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

அஞ்சல் அலுவலகம் திறப்பு

News image
Updated On :4 ஜூன் 2026, 12:58 am IST

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டம், களிவந்தப்பட்டு கிராமத்தில் புதிய அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது.

மறைமலை நகா் நகராட்சியின் கீழ் உள்ள இங்கிருந்து மகிந்திரா வோ்ல்ட் சிட்டி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எளிதில் சென்றடையலாம். இந்நிலையில் களிவந்தப்பட்டு கிளை அஞ்சல் அலுவலகம் களிவந்தப்பட்டு பஞ்சாயத்து கட்டடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. களிவந்தப்பட்டு மற்றும் கடம்பூா் கிராமபகுதி பொதுமக்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த அஞ்சலகம் காலை 9.45 முதல் மதியம் 1.45மணி வரை செயல்படும். பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சேவைகளை பெறலாம் என கோட்ட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.