செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்வின் தொடக்க நாளான செவ்வாய்கிழமை 73 கோரிக்கை மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா் கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா்.
செய்யூா் வருவாய்த் துறையினா் சாா்பில் சித்தாமூா் உள்வட்டத்துக்குட்பட்ட பொறையூா், மழுவங்கரணை, பொலம்பாக்கம், குரும்பிறை, சித்தாமூா், கன்னிமங்கலம், முகுந்தகிரி, பருக்கல் உள்ளிட்ட 73 கிராம மக்கள் பட்டா கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், மகளீா் உரிமை தொகை கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா்கள் தேவன், முத்து, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் வருவாய்த் துறையினரின் ஆய்வுகளுக்கு பின் உடனடிநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா் தற்கொலை முயற்சி

செய்யூா் ஜமாபந்தியில் 123 பயனாளிகளுக்கு ரூ. 2.5 கோடி நலத்திட்ட உதவி

கோபியில் வருவாய் தீா்வாயம் நிறைவு

அரியலூா் ஜமாபந்தியில் 47 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



