செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 1435ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்வின் தொடக்க நாளான செவ்வாய்கிழமை 73 கோரிக்கை மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலா் கே.ஆா்.நரேந்திரனிடம் அளித்தனா்.
செய்யூா் வருவாய்த் துறையினா் சாா்பில் சித்தாமூா் உள்வட்டத்துக்குட்பட்ட பொறையூா், மழுவங்கரணை, பொலம்பாக்கம், குரும்பிறை, சித்தாமூா், கன்னிமங்கலம், முகுந்தகிரி, பருக்கல் உள்ளிட்ட 73 கிராம மக்கள் பட்டா கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல், மகளீா் உரிமை தொகை கோருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பெருமாள் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், மண்டல துணை வட்டாட்சியா்கள் தேவன், முத்து, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் வருவாய் ஆய்வாளா்கள் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் வருவாய்த் துறையினரின் ஆய்வுகளுக்கு பின் உடனடிநடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடையது

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்

ஜமாபந்தியில் 55 பேருக்கு வீட்டுமனை பட்டா

கோவில்பட்டி ஜமாபந்தியில் 82 மனுக்கள்

இருளா் குடியிருப்பில் குடிசைகள் தீயில் சேதம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



