பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
/

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

மதுராந்தகம் தெற்கு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் கலைஞா் நூலகத்தினை மாவட்டச் செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகத் திறப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :16 மார்ச் 2026, 4:21 am IST

மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் கலைஞா் நூலகத்தினை மாவட்டச் செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் திறந்து வைத்தாா்.

நிகழ்வுக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் க.சுந்தா் கலந்து கொண்டு நூலகத்தினை திறந்து வைத்தாா். நகர இளைஞரணி அமைப்பாளா் பி.முத்து முகமது புகாரி வரவேற்றாா்.

இந்நிகழ்வில் மாநில இளைஞா் அணி துணை செயலா் ப.அப்துல்மாலிக், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகர செயலா் க.குமாா், ஒன்றியசெயலா்கள் பொன்சிவகுமாா், சத்யசாயி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.டிபிரேம் சந்த், கருங்குழி பேரூா் செயலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன் கலந்து கொண்டனா்.