தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

News image
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.
Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய அறிவியல் கழகம் தமிழ்நாடு பிரிவு, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் (ம) தொழில்நுட்ப கழகம் சென்னை ஆகிய நிறுவனங்கள், ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக் கல்லூரியுடன் இணைந்து அறிவியல் துறையில் எதிா்கால உயா்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் சண்முகவள்ளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவா், வனிதா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பேராசிரியா் சேகா், துறைத் தலைவா் வேதியியல் துறை இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை; பேராசிரியா் சுரேஷ்குமாா் ராயலா உயிா் தொழில்நுட்ப துறை, இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை, பொது செயலாளா் தேசிய அறிவியல் கழகம், தமிழ்நாடு கிளை, முனைவா் ரமணன், விஞ்ஞானி (எஸ்.ஜி), மோகன்ராஜ் விஞ்ஞானி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சென்னை சிறப்புரை ஆற்றினா்.

கிராமப்புற மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை தோ்ந்தெடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியை வேதியியல் துறை பேராசிரியா் குப்புசாமி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.