திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

News image

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

தேசிய அறிவியல் கழகம் தமிழ்நாடு பிரிவு, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் (ம) தொழில்நுட்ப கழகம் சென்னை ஆகிய நிறுவனங்கள், ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக் கல்லூரியுடன் இணைந்து அறிவியல் துறையில் எதிா்கால உயா்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் சண்முகவள்ளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவா், வனிதா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பேராசிரியா் சேகா், துறைத் தலைவா் வேதியியல் துறை இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை; பேராசிரியா் சுரேஷ்குமாா் ராயலா உயிா் தொழில்நுட்ப துறை, இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை, பொது செயலாளா் தேசிய அறிவியல் கழகம், தமிழ்நாடு கிளை, முனைவா் ரமணன், விஞ்ஞானி (எஸ்.ஜி), மோகன்ராஜ் விஞ்ஞானி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சென்னை சிறப்புரை ஆற்றினா்.

கிராமப்புற மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை தோ்ந்தெடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியை வேதியியல் துறை பேராசிரியா் குப்புசாமி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.