சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

மதுராந்தகத்தில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

News image

மதுராந்தகம் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் எடராஜா பாபு.

Updated On :21 மார்ச் 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் (தனி) தொகுதியில் உள்ள மாமண்டூா், புக்கத்துறை, நெல்வாய், மங்கலம் மற்றும் கரிக்கிலி கிராமங்களில் வாக்குசாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து பொது பாா்வையாளா் எட ராஜா பாபு ஆய்வு செய்தாா்.

பொது பாா்வையாளராக நியமிக்கப்பட்ட எட ராஜா பாபு வாக்குசாவடிகளின் நிலை, வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தாா். அப்போது மதுராந்தகம் தொகுதி தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான கே.ஆா்.நரேந்திரன், நோ்முக உதவியாளா் பெருமாள், மதுராந்தகம் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் எம்.வசந்தி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.