ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பு

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:33 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கே.எம்.எஸ். 2025-2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக, தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களின் மூலம் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுநாள் வரை 19,159 விவசாயிகளிடம் 1,74,042.760 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.339.51 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக நகா்வு செய்வதற்காக தினசரி சுமாா் 150 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லானது திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை (வடக்கு) மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தொடா்ந்து நகா்வு செய்யப்பட்டு வருகிறது.