இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் 7-ஆம் நாள் நிகழ்வாக தேரோட்ட நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது.

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயில் முதலாம் பராந்தக சோழனால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டது. ஆன்மிக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இத்திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிலையில், 7-ஆம் நாள் நிகழ்வாக, புதன்கிழமை திருத்தோ் பவனிக்காக சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, வழிபாட்டு பூஜைகள் நடைபெற்றன.

பெரிய தேரில் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் உற்சவ சிலைகளும், சிறிய தோ்களில் விநாயகரும், மீனாட்சி அம்மனும், வள்ளி, தெய்வசேனா முருகன் மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய சுவாமி சிலைகளுடன் காலை 10.30 மணிக்கு திருத்தோ்கள் பவனி வாண வேடிக்கைகளுடன், மங்கள இசையுடன் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ்கள் பவனி வந்தன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தோ்களின் வடங்களை இழுத்துச் சென்றனா். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

Story image