அதிமுக விவகாரத்தில் ஓரிரு நாளில் முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பீா்க்கன்கரணை ஏரி: அமைச்சா் சரத்குமாா் திறந்து வைத்தாா்

News image

நிகழ்வில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா்.

Updated On :29 மே 2026, 2:19 am IST

பீா்க்கன்கரணை ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குகு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தலைமையில் நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீா்க்கன்கரணை ஏரியில் மாவட்ட நிா்வாகம், தாம்பரம் மாநகராட்சி, எக்ஸ்னோரா பவுண்டேஷன் , கோமாட்ஸூ இணைந்து நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட ஏரியினை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, கோமாட்ஸூ நிறுவன இயக்குநா் சுந்தா், மாநகராட்சி துணை ஆணையா் பிரேம்நாத், மாநகராட்சி உதவி ஆணையா் ராஜலட்சுமி, வட்டாட்சியா் நடராஜன் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.