இன்று திருவிளக்கு பூஜை

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சகல நன்மைகளைத் தரும் திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சகல நன்மைகளைத் தரும் திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், உலக நன்மை கருதி சென்னையில் ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் உள்ள ஏ.என்.ஆர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது. பூஜை பொருள்கள் அனைத்தும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது. பூஜைக்குப் பிறகு அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத் தலைவர் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் கலந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com