செவிலியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.
Updated on
1 min read

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் வியாழக்கிழமை (நவ.16) போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள்-மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், மருந்துகள், நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைவேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், செவிலியர்களின் கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com