சென்னை ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம், 155 -ஆவது வார்டில் ராமாபுரம் ஏரி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது 8 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த ஏரிக்கரையோரத்தில் 50 -க்கும் மேற்பட்ட கடைகளும், 24 வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. மேலும், இந்த ஏரி அருகே நெசப்பாக்கம், சின்ன போரூரை இணைக்கும் பாரதி சாலை உள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இந்த ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்தது. இந்நிலையில், ராமாபுரம் ஏரி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 கட்டடங்களை அகற்ற நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர் போலீஸார் உதவியுடன் ராமாபுரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றும் பணியை புதன்கிழமை தொடங்கினர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் இப்பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


