சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:.

Updated On :9 ஏப்ரல் 2018, 10:47 pm

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:.
இரும்புலியூர் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திங்கள்கிழமை கிடந்தது. இதைப் பார்த்த, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தாம்பரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும் அந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர் யார், குப்பைத் தொட்டியில் குழந்தை வீசப்படுவதற்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.