சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:.
இரும்புலியூர் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திங்கள்கிழமை கிடந்தது. இதைப் பார்த்த, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தாம்பரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும் அந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர் யார், குப்பைத் தொட்டியில் குழந்தை வீசப்படுவதற்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலி!

ஏர் இந்தியா சேவையில் தினசரி 100 விமானங்களைக் குறைக்க முடிவு?

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு: 40 மயில்கள் உயிரிழப்பு

என் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர்: கௌதம் மேனன்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

