சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:.
இரும்புலியூர் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திங்கள்கிழமை கிடந்தது. இதைப் பார்த்த, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தாம்பரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும் அந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர் யார், குப்பைத் தொட்டியில் குழந்தை வீசப்படுவதற்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

