பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 10:48 pm

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் சாலையோர குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:.
இரும்புலியூர் புறவழிச்சாலையின் இணைப்புச் சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து இரண்டு நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை திங்கள்கிழமை கிடந்தது. இதைப் பார்த்த, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தாம்பரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். மேலும் அந்த குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்த குழந்தையின் பெற்றோர் யார், குப்பைத் தொட்டியில் குழந்தை வீசப்படுவதற்கான காரணம் என்ன என்று விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.