அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ஐசிஎஃப் பசுமைக் கலைப் பூங்கா: பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்ட பசுமைக் கலைப் பூங்கா பொது மக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்ட பசுமைக் கலைப் பூங்கா பொது மக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இந்த பூங்கா புதிய ஆவடி சாலையில், ஐ.சி.எஃப் சென்னை ரயில் அருங்காட்சியகம் முன்பு இடம்பெற்றுள்ளது. 
சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், சுற்றுப்புறங்களை அழகுபடுத்தவும் ஐ.சி.எஃப். நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களைக் கொண்டு சிறந்த கலை வல்லுநர்களால் 11 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. இந்த சிற்பங்கள் அடங்கிய பசுமைக் கலைப் பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த பூங்கா புதிய ஆவடி சாலையில், ஐ.சி.எஃப். சென்னை ரயில் அருங்காட்சியகம் முன்பு இடம்பெற்றுள்ளது. இந்த சிற்பங்கள் செழியன், மரிய அந்தோணிராஜ், ஜேகப் ஜெபராஜ், ரவீந்திரன், தேஜோமயி மேனன், சாலினி பிஸ்வஜித், அஸ்மா மேனன் போன்ற தலைசிறந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஐ.சி.எஃப் அதிகாரி கூறியது: 
இந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்புள்ள பசுமைப் பூங்கா அமைந்துள்ள இடம் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை மெட்ரோ வாட்டர் மற்றும் மும்பையை சேர்ந்த ஓரியன்டல் வெனீர் நிறுவனத்துடன் இணைந்து ஐ.சி.எஃப். இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சிற்பங்கள் அடங்கிய இந்த பூங்கா இப்பகுதிக்கு அழகு சேர்ப்பதுடன், இந்த இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும் உதவும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.