வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மோட்டார் சைக்கிள் பந்தயம்: கல்லூரி மாணவர் இருவர் உள்பட 3 பேர் கைது

சென்னை, வேப்பேரியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 10:54 pm

DIN

சென்னை, வேப்பேரியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பேரி ஈ.வெ.ரா. சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மூவரும், அரும்பாக்கம் தலைமைச் செயலக காலனி 1-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த ர.சஞ்சய் (24), அமைந்தகரை கலெக்டர் காலனி 6-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த அ. முகமது தகீம் (19), எருக்கஞ்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த சு.விக்னேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விக்னேஷ், முகமது தகீம் ஆகிய இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். சஞ்சய் ஒரு மோட்டார் சைக்கிள் விற்பனையகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.