சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீதிபதிக்கு மிரட்டல்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள்

News image
Updated On :9 ஜூலை 2018, 10:54 pm

DIN

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழஙகப்பட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முறையிட்டார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை போலீஸார் சட்டப்படி எடுப்பார்கள். அந்தப் பணிகளை போலீஸ் பார்த்துக் கொள்ளும்'' என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்துத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.