செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

கர கதை குறித்து தனுஷ்...

News image

தனுஷ் நடிக்கும் ‘கர’ - x

Updated On :15 ஏப்ரல் 2026, 9:32 am

நடிகர் தனுஷ் கர திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படம் வருகிற ஏப். 30 ஆம் தேதி வெளியாகிறது. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது.

1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் விக்னேஷ் ராஜா, “இப்படத்தின் கதையை எழுத 8 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். முழுமையாக எழுதி முடித்துவிட்டே தயாரிப்பு நிறுவனத்திடம் செல்ல வேண்டும் என்பதுதான் என் பாணி. முன்பணம் வாங்கியபின் அவரசமாக கதையை எழுதுவது துப்பாக்கியைத் தலையில் வைத்து எழுதச் சொல்வது மாதிரி.

இக்கதையை முடித்தபின் நடிகர் தனுஷிடம் சொன்னபோதே அவருக்குப் பிடித்துவிட்டது. உடனே, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. நான் அவரிடம் ஏதாவது நாயக காட்சிகளைச் சேர்க்க வேண்டுமா? எனக் கேட்டேன். அதற்கு அவர், ’இக்கதையிலேயே நாயகத்தன்மை இருக்கிறது. இதுவே போதும்’ என்றார்.” எனத் தெரிவித்துள்ளார்.

There is heroism inherent in the kara story itself, says Dhanush.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.