வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுபோதையில் தகராறு செய்வோர் மீது பெப்பர் ஸ்பிரே: விளக்கம் கோரி டிஜிபிக்கு நோட்டீஸ்

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட

Updated On :9 ஜூலை 2018, 10:50 pm

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் அம்பத்தூர் காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தும் உத்தி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இதற்காக கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 400 பெப்பர் ஸ்பிரே பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளதாவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்: இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், எந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் மது போதையில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்படுகிறது? இதனால், சம்பந்தப்படுவோரின் கண் பார்வை பாதிக்கப்படாதா?. இவ்வாறு பெப்பர் ஸ்பிரே பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? என கேள்விகளை ஆணையம் எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.