சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

செரிமானப் பாதை புற்றுநோயை எலுமிச்சம் பழம் தடுக்கும்

செரிமானப் பாதையில் புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறைப் பேராசிரியர்

News image
Updated On :15 மே 2018, 4:49 am

செரிமானப் பாதையில் புற்றுநோய் வராமல் தடுக்க எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறைப் பேராசிரியர் அஃபீ அஸ்மா கூறினார்.

இதுதொடர்பான பொதுமக்கள், மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொது அறுவைச் சிகிச்சைத் துறையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50-க்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் கேள்விகளுக்கும் மருத்துவர்கள் விடையளித்தனர்.

நிகழ்ச்சியில் டாக்டர் அஃபீ அஸ்மா பேசியது:
நமது உடலில் செரிமானப் பாதை என்பது உணவு குழாயிலிருந்து மலத்துவாரம் வரை அமைந்துள்ளது. இதில் கல்லீரல், கணையம், மண்ணீரலும் அடங்கும்.

செரிமானப் பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத முதுகுவலி காணப்படும். மதுப் பழக்கமுடையவர்களையே இது அதிகம் தாக்கும்.

செரிமான புற்றுநோய் வராமலிருக்க புளிப்புத்தன்மையுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புகைப் பிடித்தல், மது அருந்துதல், பொரித்த உணவுகள், துரித உணவகங்களில் தீயால் கருக்கப்பட்ட உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.