சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணைய புலனாய்வுப் பிரிவு டிஜிபி-க்கு, ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சென்னை, துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (21). திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக அந்தோணிராஜ் உள்ளிட்ட மூவரை நீலாங்கரை போலீஸார் கடந்த வியாழக்கிழமை (மே 17) அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அந்தோணிராஜ் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதால் தான் அந்தோணிராஜ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
தானாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி. ஜெயசந்திரன் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டிஜிபி-க்கு நீதிபதி டி.ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

