கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

முன்னாள் எம்எல்ஏ தாக்கப்பட்ட விவகாரம்: டிஎஸ்பிக்கு நோட்டீஸ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு

Updated On :5 நவம்பர் 2018, 7:35 am IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் டில்லி பாபு  அளித்த மனு விவரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட கரியமங்கலம் பகுதியில் உள்ள உணவகத்தில் கடந்த ஜூன் மாதம் 26 -ஆம் தேதி எனது கட்சி நிர்வாகிகளுடன் உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், முத்துகுமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கு சேலம் -சென்னை 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடியதாக கூறி, என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். மேலும், என் மீது பொய் வழக்கும் பதிவு செய்தனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நோட்டீஸ்: இந்த விவகாரம் தொடர்பாக செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர்  சுந்தரமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், முத்துகுமாரசாமி ஆகியோர், டிசம்பர் மாதம் 12 -ஆம் தேதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.