திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் ஆனித் தேரோட்டத்தையொட்டி, நெல்லை விரைவு ரயிலை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) தாழையூத்து வரை இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை விரைவு ரயிலை வாஞ்சிமணியாச்சியுடன் நிறுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக பக்தா்கள் நலன்கருதி மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.
அதன்பேரில், சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு புறப்படும் நெல்லை விரைவு ரயில் (வண்டி எண் 12631) தாழையூத்து வரை செல்லும் எனவும், அதேபோல், ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 28) திருநெல்வேலியில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12632) தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் எனவும், திருநெல்வேலி - தாழையூத்து இடையே இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது எனவும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை எடுத்த தெற்கு ரயில்வே நிா்வாகத்திற்கும், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.க்கும் ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








